search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு 3 பேர் பலி

    புதுவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள்.
    புதுச்சேரி: 

    புதுவையில் 2 ஆயிரத்து 686 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 431 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 279, காரைக்காலில் 109, ஏனாமில் 34, மாகியில் 9 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 82, காரைக்காலில் 20, ஏனாமில் 6, மாகியில் 7 பேர் என 115 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  புதுவையில் ஆயிரத்து 102, காரைக்காலில் 399, ஏனாமில் 103,  மாகியில் 4 பேர் என ஆயிரத்து 608 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 563 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 159 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 3 ஆயிரத்து 322, காரைக்காலில் ஆயிரத்து 685, ஏனாமில் 300, மாகியில் 36 பேர் என 5 ஆயிரத்து 343 பேர்  வீட்டு தனிமையில் உள்ளனர்.  புதுவை மாநிலத்தில் இப்போது 5 ஆயிரத்து 458 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.  புதுவை வாழைக்குளத்தை சேர்ந்த 79 வயது முதியவர், முத்தியால்பேட்டையை சேர்ந்த 73 வயது முதியவர், காரைக்காலை சேர்ந்த 72 வயது மூதாட்டி என 3 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர்.  
    இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு  பலியானோர்  எண்ணிக்கை ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2&வது தவணை உள்பட 15 லட்சத்து 40 ஆயிரத்து 256 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×