என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    திருக்கோவிலூர் அருகே 1000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு - 2 பேர் மீது வழக்கு

    திருக்கோவிலூர் அருகே 1000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஆதிச்சனூர் துரிஞ்சல் ஆற்றின் கரையோரம் போலீசார் மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். 

    அப்போது 2 பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. 
    விசாரணையில் அந்த சாராய ஊறல் திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பாளையத்தை சேர்ந்த, குமார் மற்றும் சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×