என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வண்டலூர் அருகே ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறிப்பு

    வண்டலூர் அருகே ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்தது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் ராஜி. ஆட்டோ டிரைவர். இவர் வண்டலூர் மேம்பாலம் ரிங் ரோட்டில் ஆட்டோ ஓட்டிச்சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வாலாஜாபாதிற்கு செல்ல வழி கேட்டார்.

    திடீரென அந்த வாலிபர் ஆட்டோ டிரைவர் ராஜியின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×