என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ராஜபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளை முயற்சி

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 45). அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர் கடந்த 2011-16-ம் ஆண்டு வரை ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர். இவருக்கு கீழான்மலை மாநாடு பகுதியில் சொந்தமாக பேப்பர் மில் உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா கருப்பு துணியால் கட்டப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டு சமையற்காரர் ரவி உடனே கோபால்சாமிக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்திருந்த 2 பேர் கோபால்சாமி வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைவதும், வீட்டுக்குள் செல்ல முடியாததால் தங்கள் கொள்ளை திட்டத்தை கைவிட்டு திரும்புவதும் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×