என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவியின் இல்லத்தில் விசாரணை மேற்கொள்ளும் பா.ஜ.க.வை சேர்ந்த குழுவினர்.
அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - முன்னாள் எம்.பி.விஜயசாந்தி பேட்டி
அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் எம்.பி.விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா (வயது 17). இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ்&2 படித்து வந்தார்.
இந்த நிலையில், அவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு விடுதியின் காப்பாளர் சகாயமேரி காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சகாயமேரி கைது செய்யப்பட்டார்.
மாணவியை மதமாற்ற வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று பா.ஜ.க.வினரும், இந்து அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஏற்கனவே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்திவிட்டு சென்றனர்.
இதற்கிடையே பா.ஜ.க. மேலிடம் அமைத்த உண்மை கண்டறியும் குழுவினர் வடுகபாளையம் கிராமத்தில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா மற்றும் சகோதரர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
மாணவியின் தற்கொலை விவகாரத்தில், நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார்.
அந்த குழுவில் இடம் பெற்றுள்ள மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்தியாரே, தெலுங்கானாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. விஜயசாந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்ராதாய்வாக், கர்நாடகாவைச் சேர்ந்த கீதா விவேகானந்தன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர், மாணவியின் ஊரான வடுகபாளையம் கிராமத்துக்கு நேற்று சென்றனர்.
அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர்களிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் விஜயசாந்தி கூறியதாவது:
மாணவியை மதம் மாற வலியுறுத்திய நிலையில், அதற்கு சம்மதிக்காததால், தொடர்ந்து வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்துள்ளார். மாணவி தங்கிய இல்லம் காலாவதியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டன. பெயர் பெற்ற பள்ளி என சொல்லப்படும் நிலையில், விடுதிக்கான உரிமத்தை புதுப்பிக்க தவறியுள்ளனர். மாணவியை கொடுமைபடுத் தியுள்ளனர். பா.ஜ.க.வின் போராட்டத்தால்தான் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.
மதம் மாற்ற முயற்சிப்பது குறித்து கான்வெண்டில் படிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் யோசிக்க வேண்டும். இந்த விசயத்தில் முதல்வர் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இந்த விச யத்தில் முதல்வர் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்? பதில் சொல்ல வேண்டிய இடத்தில் முதல்வர் உள்ளார். இந்த சம்பவத்தை ஆளும் தி.மு.க. அரசு திசைமாற்ற முயற்சிக்கிறது.
மதத்தை வைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாது காப்பு இல்லை. மாணவி தற்கொலை விவகாரத்தில் போலீஸ் அராஜகம் செய்வதாகவும், இப்படித்தான் சொல்ல வேண்டும் என போலீசார் கட்டாயப்படுத்து வதாகவும் பெற்றோர் கூறி உள்ளனர்.
கட்டாயபடுத்தி மதம் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இறந்த மாணவி யின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அது வரை இப்பிரச்சினையை பா.ஜ.க. விடாது. லாவண்யா குடும்பத்திற்கு நீதி கிடைக்க வில்லை என்றால் இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும். மதமாற்ற நடவ டிக்கை முயற்சிக்கு இத்துடன் முடிவுகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், மாவட்டத் தலைவர் அய்யப்பன் உட்பட பலரும் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா (வயது 17). இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ்&2 படித்து வந்தார்.
இந்த நிலையில், அவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு விடுதியின் காப்பாளர் சகாயமேரி காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சகாயமேரி கைது செய்யப்பட்டார்.
மாணவியை மதமாற்ற வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று பா.ஜ.க.வினரும், இந்து அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஏற்கனவே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்திவிட்டு சென்றனர்.
இதற்கிடையே பா.ஜ.க. மேலிடம் அமைத்த உண்மை கண்டறியும் குழுவினர் வடுகபாளையம் கிராமத்தில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா மற்றும் சகோதரர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
மாணவியின் தற்கொலை விவகாரத்தில், நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார்.
அந்த குழுவில் இடம் பெற்றுள்ள மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்தியாரே, தெலுங்கானாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. விஜயசாந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்ராதாய்வாக், கர்நாடகாவைச் சேர்ந்த கீதா விவேகானந்தன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர், மாணவியின் ஊரான வடுகபாளையம் கிராமத்துக்கு நேற்று சென்றனர்.
அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர்களிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் விஜயசாந்தி கூறியதாவது:
மாணவியை மதம் மாற வலியுறுத்திய நிலையில், அதற்கு சம்மதிக்காததால், தொடர்ந்து வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்துள்ளார். மாணவி தங்கிய இல்லம் காலாவதியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டன. பெயர் பெற்ற பள்ளி என சொல்லப்படும் நிலையில், விடுதிக்கான உரிமத்தை புதுப்பிக்க தவறியுள்ளனர். மாணவியை கொடுமைபடுத் தியுள்ளனர். பா.ஜ.க.வின் போராட்டத்தால்தான் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.
மதம் மாற்ற முயற்சிப்பது குறித்து கான்வெண்டில் படிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் யோசிக்க வேண்டும். இந்த விசயத்தில் முதல்வர் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இந்த விச யத்தில் முதல்வர் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்? பதில் சொல்ல வேண்டிய இடத்தில் முதல்வர் உள்ளார். இந்த சம்பவத்தை ஆளும் தி.மு.க. அரசு திசைமாற்ற முயற்சிக்கிறது.
மதத்தை வைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாது காப்பு இல்லை. மாணவி தற்கொலை விவகாரத்தில் போலீஸ் அராஜகம் செய்வதாகவும், இப்படித்தான் சொல்ல வேண்டும் என போலீசார் கட்டாயப்படுத்து வதாகவும் பெற்றோர் கூறி உள்ளனர்.
கட்டாயபடுத்தி மதம் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இறந்த மாணவி யின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அது வரை இப்பிரச்சினையை பா.ஜ.க. விடாது. லாவண்யா குடும்பத்திற்கு நீதி கிடைக்க வில்லை என்றால் இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும். மதமாற்ற நடவ டிக்கை முயற்சிக்கு இத்துடன் முடிவுகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், மாவட்டத் தலைவர் அய்யப்பன் உட்பட பலரும் உடனிருந்தனர்.
Next Story






