என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுச்சேரியில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
புதுச்சேரியில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனனர்.
புதுச்சேரி:
புதுவையில் 31-ந் தேதி 3 ஆயிரத்து 366 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக ஆயிரத்து 640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 380, காரைக்காலில் 179, ஏனாமில் 71, மாகியில் 10 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 101, காரைக்காலில் 27, ஏனாமில் 8, மாகியில் 8 பேர் என 144 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 830, காரைக்காலில் 101, ஏனாமில் 115, மாகியில்23 பேர் என ஆயிரத்து 69 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 891 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 689 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 5 ஆயிரத்து 889, காரைக்காலில் 2 ஆயிரத்து 426, ஏனாமில் 758, மாகியில் 50 பேர் என 9 ஆயிரத்து 123 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இப்போது 9 ஆயிரத்து 267 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
புதுவை கிருமாம் பாக்கத்தை சேர்ந்த 33 வயது ஆண், முள்ளோடையை சேர்ந்த 44 வயது ஆண், லாஸ்பேட்டையை சேர்ந்த 41 வயது ஆண், தட்டாஞ்சாவடியை சேர்ந்த 75 வயது முதியவர் என 4 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 35 ஆயிரத்து 643 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story






