என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும்-ஓம்சக்திசேகர் வலியுறுத்தல்

    மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் மின்துறை  தனியார் மயம் ஆக்குவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக  நடைபெற்று வருகிறது. 

    இதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்துறை தனியார் மயம் ஆக்கப்படுவதால் வீட்டு மின்சார கட்டணம் உயர்வு, வைப்பு தொகை உயர்வு, ஊழியர்கள் பணி சுமை அதிகரிப்பு போன்ற பல்வேறு மக்களை பாதிக்கும் விஷயங்கள் இருப்பதாக  உணர்கிறோம். 

    எனவே புதுவை அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி, மக்களை பாதிக்கும் போராட்டத்தை  முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 

    அவர்கள் மீது அடக்கு முறைகள் மேற்கொள்வதும், 144 தடை உத்தரவு  போன்ற செயல்களால் மின்துறை ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். 

    புதுவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மின்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றிட அவர்களுக்கு நியாயம் கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து நல்ல தீர்ப்பு பெற்று தர வேண்டும். 

    மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் இந்த கால கட்டத்தில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் மாணவர்கள் கல்வியை பாதிக்கும். 

    எனவே அரசு விரைந்து செயல்பட்டு மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×