என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடற்கரை சாலை காந்தி திடல் அருகே கடல் தீர்த்தவாரியில் உற்சவமூர்த்திகள் பங்கேற்றர்.
புதுச்சேரி கடற்கரையில் தீர்த்தவாரி
புதுவை கடற்கரையில் தை அமாவாசை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
தை மாதம் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
தை அமாவாசை 31-ந் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதனால் கடல் தீர்த்தவாரியில் பெரும்பாலான சுவாமிகள் பங்கேற்கவில்லை.
இன்று (பிப்ரவரி1) அமாவாசை தொடர்ந்ததை யொட்டி புதுவை கடற்கரையில் பல்வேறு கோவில்களில் இருந்து வந்த உற்சவ சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.
லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோவில், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரர் கோவில், மணக்குளவிநாயகர், காமாட்சி அம்மன், சுந்தரவினாயகர் கோவில், கவுசிக பாலசுப்பிரமணியர், தண்டுமுத்துமாரியம்மன், வரதராஜபெருமாள் உட்பட பல்வேறு
கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புதுவை கடற்கரை காந்தி திடலுக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர். புதுவை கடற்கரை காந்தி திடலில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதேபோல சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்று கரையோரங்களிலும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
Next Story






