என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மின்துறை ஊழியர்கள் போராட்டம் அதிகாரிகளுடன் ரங்கசாமி ஆலோசனை

    மின்துறை ஊழியர்கள் போராட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினர்
    புதுச்சேரி:

    புதுவை மின்துறை ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலெக்டர் வல்லவன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
     
    அத்தியாவசிய பட்டியலில் இடம் பெற்றுள்ள மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை தடுக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஆலோசித்தார்.  ஏற்கனவே மின்துறை தலைவர் சண்முகம், மின்துறை தலைமை அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார். 

    இதற்கான உத்தரவை கலெக்டர் பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
    Next Story
    ×