search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மாணவர்கள் கிராமபுறங்களில் ஒராண்டு பணி செய்ய அரசு ஆணை-அ.தி.மு.க. வலியுறுத்தல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இலவச மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் கிராமபுறங்களில் ஒராண்டு பணி செய்ய அரசு ஆணை வெளியிட வேண்டும் என்று அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-

    புதுவை அரசு ஆண்டுக்கு ரூ 30 கோடிக்கு மேல் மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பயில மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. 

    மருத்துவ கல்வியை முடித்தவுடன் கட்டாயம் ஓராண்டு மக்களுக்கு கிராமப் புறங்களில் அரசு நிர்ணயிக்கும் சம்பளத்திற்கு பணியாற்ற வேண்டும் என புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

    அதேபோன்று சென்டாக் மூலம் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த மாணவர்கள் உயர்கல்வி பயில கல்விக் கட்டணத்தில் ஒரு பகுதியை அரசு செலுத்த முன்வர வேண்டும். 

    அவ்வாறு அரசு மூலம் மருத்துவ உயர்கல்வி எம்.டி.,எம்.எஸ். போன்ற படிப்பு முடித்த வர்கள், தங்களது படிப்பு முடித்தவுடன் குறைந்தது 2 ஆண்டு காலம் அரசு மருத்துவமனையில் தங்களது மருத்துவ பணியை அரசு நிர்ணயம் செய்யும் சம்பளத்தில் பணி செய்ய ஒப்பந்தம் போடவேண்டும்.

    தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை சட்ட
    ரீதியாக பெற்று தந்தனர். 

    தமிழகத்தை பின்பற்றி மருத்துவக் கல்வியின் அரசு ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கையை இந்த கல்வி ஆண்டில் அரசு எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அன்பழகன் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
    Next Story
    ×