என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
    X
    வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    புதுச்சேரி வக்கீல்கள் சங்கம் உண்ணாவிரதம்

    புதுவை வக்கீல்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை வக்கீல்கள் சங்கம் சார்பில் கடலூர் சாலை கோர்ட்டு வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கதிர் வேல் முன்னிலை வகித்தார். வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் பலர் போராட்டத்தில் பங்கேற்றனர். 

    புதுவை நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்கு களையும் கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஐகோர்ட்டு அனுமதிக்க வேண்டும். வாரிசு உரிமை வழக்குகளை புதுவை மாநிலத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 

    புதுவை அரசு வாரிசுரிமை சான்றிதழ் வழங்க வருவாய்த்துறைக்கு அளித்த அதிகாரத்தை வக்கீல்கள், மற்றும் பயனாளிகள் நலன்கருதி திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

    போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களுக்கு சங்க செயற்குழு உறுப் பினர் மணிகண்டன் மரணமடைந்ததாக தகவல் வந்தது. இதையடுத்து 11 மணியளவில் வக்கீல்கள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×