என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்த நகை, பணத்தை இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் பார்வையிட்டபோது எடுத்த படம்.
அரியலூரில் ரசாயன பொடி தூவி நகை பறிக்கும் நவீன கொள்ளையர்களிடமிருந்து ரூ.6 லட்சம் நகை, பணம் பறிமுதல்
ரசாயன பொடி தூவி நகை பறிக்கும் நவீன கொள்ளையர்களிடமிருந்து ரூ.6 லட்சம் நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து உடையார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இரும்புலிக் குறிச்சி, பரணம், உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக நில அளவையர், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பலரிடம் ரசாயன பொடி தூவி கொள்ளை முயற்சி நடந்தது.
பெண்களிடம் தங்களது துப்பட்டா வண்டியில் மாட்டியுள்ளது, சேலை வண்டியில் மாட்டி உள்ளது என்று கூறி 2 இளைஞர்கள் நூதன முறையில் ரசாயன பொடிதூவி கொள்ளையடிக்க முயற்சித்தனர்.ஆனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்துறையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் பழனியம்மாள் (வயது 50) என்பவர் செந்துறையில் இருந்து தனது ஸ்கூட்டரில் சொந்த ஊரான நல்லாம்பாளையம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார். சமத்துவபுரம் அருகே சென்ற அவரை பின் தொடர்ந்து வந்த அதே இளைஞர்கள் பழனியம்மாளி டம் தங்களது சேலை வண்டியில் மாட்டி உள்ளது என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அவர் வண்டியை நிறுத்த முயற்சித்தபோது அந்த கொள்ளையர்கள் ரசாயன பொடி தூவி அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பினர். கடந்த ஒரு வார காலமாக இந்த தொடர் கொள்ளை தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் மற்றும் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன்பேரில் உடையார் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி, இரும்புலிக்குறிச்சி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் ஆகியோர் தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணித்து வந்தனர். ஆங் காங்கே உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவின் மூலம் தேடி வந்த நிலையில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேரை அடையாளம் கண்டு தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை இரும்புலிக்குறிச்சி அருகே பல்சர் பைக்கில் சென்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செந்துறை அருகே உள்ள பூமுடையான்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (27), அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு ராஜேஷ் (24) என்பதும் அவர்கள் கடந்த 1 வாரமாக தொடர் வழிப்பறியில் இப்பகுதியில் ஈடுபட்டதும் தெரிந்தது.
சில மாதங்களுக்கு முன் பொன்பரப்பி, ஆனந்தவாடி ஆகிய கிராமங்களிலும் பெண்களிடம் நகைகள் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவத்தின் போது பெண்களின் கண் தெரியாமல் இருப்பதற்காக கான்பிளார் மாவை தூவியதையும் கூறினர். மேலும் அவர்கள் கடன் தொல்லையால் இதுபோன்ற வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 17 சவரன் நகை, ரூ.60 ஆயிரம் பணம், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை இரும்புலிக்குறிச்சி போலீசார் செந்துறை குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.
கடந்த ஒரு வாரமாக செந்துறை பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வழிப்பறி கொள் ளையர்கள் போலீசாரிடம் சிக்கியது நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து உடையார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இரும்புலிக் குறிச்சி, பரணம், உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக நில அளவையர், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பலரிடம் ரசாயன பொடி தூவி கொள்ளை முயற்சி நடந்தது.
பெண்களிடம் தங்களது துப்பட்டா வண்டியில் மாட்டியுள்ளது, சேலை வண்டியில் மாட்டி உள்ளது என்று கூறி 2 இளைஞர்கள் நூதன முறையில் ரசாயன பொடிதூவி கொள்ளையடிக்க முயற்சித்தனர்.ஆனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்துறையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் பழனியம்மாள் (வயது 50) என்பவர் செந்துறையில் இருந்து தனது ஸ்கூட்டரில் சொந்த ஊரான நல்லாம்பாளையம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார். சமத்துவபுரம் அருகே சென்ற அவரை பின் தொடர்ந்து வந்த அதே இளைஞர்கள் பழனியம்மாளி டம் தங்களது சேலை வண்டியில் மாட்டி உள்ளது என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அவர் வண்டியை நிறுத்த முயற்சித்தபோது அந்த கொள்ளையர்கள் ரசாயன பொடி தூவி அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பினர். கடந்த ஒரு வார காலமாக இந்த தொடர் கொள்ளை தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் மற்றும் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன்பேரில் உடையார் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி, இரும்புலிக்குறிச்சி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் ஆகியோர் தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணித்து வந்தனர். ஆங் காங்கே உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவின் மூலம் தேடி வந்த நிலையில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேரை அடையாளம் கண்டு தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை இரும்புலிக்குறிச்சி அருகே பல்சர் பைக்கில் சென்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செந்துறை அருகே உள்ள பூமுடையான்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (27), அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு ராஜேஷ் (24) என்பதும் அவர்கள் கடந்த 1 வாரமாக தொடர் வழிப்பறியில் இப்பகுதியில் ஈடுபட்டதும் தெரிந்தது.
சில மாதங்களுக்கு முன் பொன்பரப்பி, ஆனந்தவாடி ஆகிய கிராமங்களிலும் பெண்களிடம் நகைகள் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவத்தின் போது பெண்களின் கண் தெரியாமல் இருப்பதற்காக கான்பிளார் மாவை தூவியதையும் கூறினர். மேலும் அவர்கள் கடன் தொல்லையால் இதுபோன்ற வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 17 சவரன் நகை, ரூ.60 ஆயிரம் பணம், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை இரும்புலிக்குறிச்சி போலீசார் செந்துறை குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.
கடந்த ஒரு வாரமாக செந்துறை பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வழிப்பறி கொள் ளையர்கள் போலீசாரிடம் சிக்கியது நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






