என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழக்கு
கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை - பெண்ணை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில், கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையின் போது, பெண்ணை தாக்கிய வாலிபர் மீது, கோட்டுச்சேரி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் மாலா(55). இவருக்கும், அதே பகுதியைச்சேர்ந்த மாரியம்மாள்(48) என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. இது குறித்து, மாரியம்மாள் தனது மகன் பிரசாத்திடம்(29) கூறியுள்ளார்.
தொடர்ந்து, பிரசாத், நேற்று முன்தினம் மாலை, மாலாவை திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, மாலா கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் பிரசாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






