என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுவையில் ஒரே நாளில் 855 பேருக்கு கொரோனா
புதுவையில் ஒரே நாளில் 855 பேருக்கு கொரோனா ஏற்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரி :
புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 570 பேருக்கும், காரைக்காலில் 172 பேர், ஏனாமில் 102 பேரும், மாகியில் 11 பேர் என மொத்தம் 855 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் தற்போது 12,542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 28-ந் தேதி 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,923 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மாநிலத்தில் இதுவரை 1,45,359 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த தகவலை புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி முதல் தவணை 9,20,377 பேரும், 2-ம் தவணை 6,04,157 பேரும் செலுத்தியுள்ளனர்.பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 7,061 பேர் செலுத்தியுள்ளனர். ஒட்டு மொத்தமாக 15 லட்சத்து 31 ஆயிரத்து 595 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
Next Story






