search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
    X
    தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    புதுவையில் மின் கட்டணம் உயரும் அபாயம் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு-போராட்டம்

    தனியார் மயமாக்குவதால் புதுவையில் மின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்படும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி :

    யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி யூனியன் பிரதேசமான புதுவையில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்க பூர்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    இதற்கு மின்துறை ஊழியர்கள், பொறியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். 

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    இதனிடையே தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. 

    புதிய ஆட்சியில் மின்துறை தனியார் மயமாக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அமைச் சரவை கூட்டத்தில் மின் துறையை தனியார் மயமாக்
    குவது குறித்து விவாதிக்கப் பட்டது. இதில் ஊழியர்களிடம் கருத்து கேட்பது என முடிவு செய்யப்பட்டது. 

    ஆனால் இந்த கருத்து கேட்பு கூட்டத்தை தனியார் 
    மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் புறக்கணித்தனர். இதனிடையே மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் வருகிற 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு  அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், தொழிற் சங்கத்தினரிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். 

    ஊழியர்கள் போராட்டத்தை தவிர்க்கும் வகையில் தொழில்தகராறு சட்டத்தின் கீழ் மின்துறையை பொது பயன்பாட்டு சேவையாக கவர்னர் அறிவித்துள்ளார். போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை செயலர் எச்சரிக்கை விடுத் துள்ளார். 

    இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை மூலம் வருகிற 31-ந் தேதி சமரச பேச்சுவார்த்தைக்கும் போராட்டக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

    மேலும் மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது என எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.  மின்துறையை தனியார் மயமாக்கினால் கட்டணம் உயரும் என்பதால் பொதுமக்களும் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வேண்டுகோளும் வைத் துள்ளனர். 

    இதனிடையே அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு  எதிராக அண்ணாசாலை அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத் துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. சேது செல்வம் தலைமை வகித்தார். ஐ.என்.டி.யூ.சி. ஞானசேகரன், சி.ஐ.டி.யூ. சீனுவாசன், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச., எம்.எல்.எப்., விடுதலை சிறுத்தைகள், அரசு ஊழியர் சம்மேளனம், ஏ.ஐ.சி.சி.டி.யூ., இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், அறிவியல் மன்றம் ஆகியவற்றின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    Next Story
    ×