என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆய்வு செய்த காட்சி
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிகள், பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மணி நேரில் ஆய்வு
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிகள், பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டு கவுன்சிலர்கள் வீதம் 60 கவுன்சிலர்கள் என மொத்தம் 81 கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது.
பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் வேட்பாளர் உடன் வருபவர்கள் படிவம் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சாமியான பந்தல் கூடிய அறை மற்றும் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடிய 3 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அறைகள், அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் வந்து செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தனி தனி வழிகள், மூங்கில் கட்டையாளால் ஆன தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள், முதியவர் ஓய்வெடுக்கும் பகுதி, நகராட்சி வளாகத்திற்குள் வந்து செல்லும் அனைவருக்கும் கிருமி நாசினி வழங்கும் பணிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு போன்ற பணிகளை எஸ்.பி. மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், ஆய்வின்போது நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குமரிமன்னன் உடனிருந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டு கவுன்சிலர்கள் வீதம் 60 கவுன்சிலர்கள் என மொத்தம் 81 கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது.
பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் வேட்பாளர் உடன் வருபவர்கள் படிவம் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சாமியான பந்தல் கூடிய அறை மற்றும் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடிய 3 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அறைகள், அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் வந்து செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தனி தனி வழிகள், மூங்கில் கட்டையாளால் ஆன தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள், முதியவர் ஓய்வெடுக்கும் பகுதி, நகராட்சி வளாகத்திற்குள் வந்து செல்லும் அனைவருக்கும் கிருமி நாசினி வழங்கும் பணிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு போன்ற பணிகளை எஸ்.பி. மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், ஆய்வின்போது நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குமரிமன்னன் உடனிருந்தார்.
Next Story






