search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தகராறை தட்டிக்கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து வாலிபர் கைது

    தகராறை தட்டிக்கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு டி.ஆர். நகர் கருணாகரபிள்ளை தெருவை சேர்ந்தவர் சுகாசினி. இவர் கணவரை விட்டு பிரிந்து தனது மகன் கவுதம் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். 

    கவுதம் சாரம் எஸ்.ஆர்.எஸ். சுப்பிரமணியம் அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 

    இதற்கிடையே கவுதமின் நண்பரான மதி என்பவரிடம் நெல்லித்தோப்பு கோவிந்த நாயக்கர் தெருவை சேர்ந்த அன்புமணி (வயது 19) என்பவர் தகராறு செய்து திட்டியதாக கூறப்படுகிறது.  இதனை மதி தனது நண்பர் கவுதமிடம் முறையிட்டார். 

    இதையடுத்து கவுதம்  அன்புமணியிடம் சென்று இது தொடர்பாக தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. 

    அப்போது ஆத்திரம் அடைந்த அன்புமணி மறைத்து   வைத்திருந்த கத்தியை எடுத்து கவுதமின் தலை மற்றும் முதுகில் சரமாரியாக   குத்தினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அன்புமணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

    இதில் பலத்த காயம் அடைந்த   கவுதமனை அப்பகுதியை சேர்ந்த அருண் மற்றும் சிலர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கவுதமுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அவரது தாய் சுகாசினி கொடுத்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புமணியை கைது செய்தனர்.
    Next Story
    ×