என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மேஸ்திரி வீட்டில் நகை கொள்ளை
Byமாலை மலர்28 Jan 2022 10:03 AM GMT (Updated: 28 Jan 2022 10:03 AM GMT)
பாணாவரம் அருகே மேஸ்திரி வீட்டில் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரியங்கா (24). என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் தம்பதியர் வீட்டை பூட்டி விட்டு வள்ளுவம் பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் சீமந்த நிகழ்ச்சிக்கு சென்று மாலை 5 மணிக்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது பீரோவை உடைத்து அதில் பிரியங்கா திருமணத்தின் போது தாய் வீட்டில் சீதனமாக கொடுத்த இரண்டு ஜோடி கம்மல், மோதிரம், செயின் உள்ளிட்ட 12 பவுன் தங்க நகைகள் மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
மேலும் பீரோவில் இருந்த பர்ஸில் ரேசன் கார்டு, ஆதார் கார்டு 2 ஆயிரம் பணம், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களையும் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து வெங்கடேசன் பாணா வரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைத்து அங்கிருந்த சில பொருட்களில் இருந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்து எடுத்தனர்.
மேலும் மோப்ப நாய் சிம்பா கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் ஓடி நின்றுவிட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் மாலை 7 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X