search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மின்துறை போராட்டக்குழுவுடன் தொழிலாளர் துறை சமரச முயற்சி

    மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறி யாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப் பட்டது. இதில் மின்துறை பொறியாளர்கள், ஊழியர் களுடன் மின்துறை செயலாளர் மூலம் சாதக, பாதக கருத்துக்களை கேட்டறிவது என முடிவு செய்யப்பட்டது. 

    அதையடுத்து கடந்தாண்டு கருத்து கேட்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த கூட்டத்தில் மின் ஊழியர்கள் பங்கேற்க வில்லை. அண்மையில் மின்துறையில்  தனியார் மயம் மற்றும் பணி பாதுகாப்பு தொடர்பாக கருத்துக் கேட்பு விளக்கக் கூட்டம் நடந்தது. 

    அந்த கூட்டமும் தோல்வியில் முடிந்தது. மின்துறை ஊழியர்களை அரசு ஊழியராக தொடர எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. அரசு ஊழியராக தான் பணிக்கு வந்தோம். அரசு ஊழியராகவே பணி ஓய்வு பெறுவோம். அதனால் பிப்ரவரி 1-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத் துக்கு செல்ல மின்துறை பொறியாளர்கள்-தொழிலாளர்கள் தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தொழி லாளர் நலத்துறை சமரச அதிகாரி வெங்கடேசன் மின்துறை சிறப்பு அதிகாரிக் கும், மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.  அதன்படி, தொழில் தகராறு சட்டம் 1947-ன் பிரிவு 12--ன் கீழ் தேவைப்பட்டால் இந்த விஷயத்தில் சமூக தீர்வை கொண்டு வர 31-ந் தேதி மாலை 4 மணிக்கு சமரச நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.  

    இதற்கு தேவையான ஆதாரங்களுடன் பங்கேற்க வேண்டும். இதில் தங்கள் தரப்பு விளக்கத்தை நேரில் தெரிவிக்க  தவறினால், தகுதியின் அடிப்படையில் தீர்வு காணப்படும். சமரசத்தின் போது இரு தரப்பினரும் முறையே விரிவான பதிலை தாக்கல் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×