என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
2 மாநிலங்களில் கொடியேற்றியதில் எவ்வித விதிமீறலும் இல்லை- கவர்னர் தமிழிசை பேட்டி
Byமாலை மலர்27 Jan 2022 8:43 AM GMT (Updated: 27 Jan 2022 8:43 AM GMT)
2 மாநிலங்களில் கொடியேற்றியதில் எவ்வித விதிமீறலும் இல்லை என கவர்னர் தமிழிசை கூறினார்.
புதுச்சேரி:
புதுவை செயின்ட்தெரேஸ் வீதியில் உள்ள வண்ண அருவி ஓவியக்கூடத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை கவர்னர் தமிழிசை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2 மாநிலங்களில் கொடி யேற்றியதை சாதனையாக நினைக்கவில்லை. 2 மாநில மக்களையும் மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 2 மாநிலங்களிலும் கொடி யேற்றினேன். இதில் விதி முறைகளை மீறி எதையும் செய்யவில்லை. என்னுடைய தேசபக்தியை வெளிப்படுத்தவும் மக்கள் மீதான அன்பை வெளிப்படுத்தவே 2 மாநிலங்களிலும் கொடி யேற்றினேன். இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முதல்&அமைச்சர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது.
கவர்னருடன் ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை என்பதால் கவர்னர்கள் ஓற்றர்களாக செயல்படுவதாக நாராயணசாமி குற்றம் சாட்டுகிறார். அனைத்து மாநில கவர்னர்களும் நடு நிலையோடு செயல்படு கிறோம். கவர்னர்கள் வளாகத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நாங்களும் மக்களுக்கான சேவையை செய்கிறோம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னரை வேறு பார்வையுடன் பார்க் கிறார்கள்.
மத்திய அரசு பல நல்ல திட்டங்களை முன்வைக்க கொடுத்துள்ளது. வரும் பட்ஜெட்டிலும் பல நல்ல திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு தோழமையுடன் திட்டங்களை தருகிறது. புதுவை மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ அனைத்து உதவிகளையும் செய்கிறோம்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
ஜனாதிபதியாக நீங்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரிப்புடன் கவர்னர் தமிழிசை விடை பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X