search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவையில் 940 பேருக்கு கொரோனா

    புதுவையில் 940 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஏனாம் பகுதியை சேர்ந்த மூதாட்டி பலியாகியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 26-ந் தேதி 2217 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் 940 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 635 பேரும்,, காரைக்காலில் 234 பேரும், ஏனாமில் 57 பேரும், மாகியில் 14 பேரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 36 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 34 பேரும், அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 14 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 68 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது மருத்துவ மனையில் 226 பேர், வீட்டு தனிமையில் 15525 பேர் என ஒட்டு மொத்தமாக 15751 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

    இன்று 1486 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 698 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 31 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    இதற்கிடையே ஏனாமை சேர்ந்த 80 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1916 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×