என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிற்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு: உண்மையை மறைக்க தி.மு.க. முயற்சி-அ.தி.மு.க. கண்டனம்
Byமாலை மலர்27 Jan 2022 6:56 AM GMT (Updated: 27 Jan 2022 6:56 AM GMT)
பிற்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு தொடர்பாக பொய் பிரசாரம் மூலம் உண்மையை மறைக்க தி.மு.க. முயற்சி செய்கிறது என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரியில் 15 சதவீத மத்திய அரசுக்கான இட ஒதுக்கீட்டில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடமளிக்க அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது.
அந்த குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று மருத்துவம் சார்ந்த அகில இந்திய இடங்களில் 27 சதவீதம் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு வழங்கலாம் என மத்திய பா.ஜனதா அரசு ஆணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க.வின் கோரிக்கையின்படி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட அரசாணை செல்லும் என சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம் நாடு முழுவதும் மருத்துவக் கல்வியில் மத்திய அரசுக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இட ஒதிக்கீடு பெற்றதற்கு அ.தி.மு.க.வின் தொடர் நடவடிக்கையே காரணமாகும்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, சமீபகாலமாக அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு உரிய இடம் தங்களால் தான் கிடைக்கப் பெற்றது என தி.மு.க. பொய் கூறி மக்களை திசை திருப்பியுள்ளது.
27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப் படுத்தியதில் தி.மு.க.விற்கு முழு பங்கு இருப்பதாக மற்ற மாநில மக்களையும் நம்ப முயற்சி மேற்கொண்டுள்ளதை புதுவை அ.தி.மு.க. வன்மை யாக கண்டிக்கிறது.
தற்போது பிற்படுத்தப் பட்டவர்களுக்கு தான் உரிமையை பெற்றுத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தி.மு.க. ஆட்சி நடத்தும் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வர்களின் உரிமையும், வாழ்க்கைத் தரமும் உயர்வு பெற்றிட 27 சதவீதமான இடங்களில் போட்டியிட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஏன் உரிய இட ஒதிக்கீடு வழங்க வில்லை.?
இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X