என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
கொரோனாவால் உயிரிழந்த கிறிஸ்தவ பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்த முஸ்லீம் அமைப்பு
கொரோனாவால் உயிரிழந்த கிறிஸ்தவ பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்தனர் முஸ்லீம் அமைப்பினர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்து தரக்கோரி, அவரது குடும்பத்தினர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா எனும் முஸ்லீம் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளை தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அந்த அமைப்பின் கோவிட் ரிலீப் கமிட்டி தலைவர் அகமது இக்பால் தலைமையில், செயல்வீரர்கள் இப்ராஹிம், சதாம், ஷாஜகான் ஆகியோர் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி, தொண்டமாந்துறை கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்களின் கல்லறையில் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்தனர். முஸ்லீம் அமைப்பினரின் இச்செயலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்து தரக்கோரி, அவரது குடும்பத்தினர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா எனும் முஸ்லீம் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளை தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அந்த அமைப்பின் கோவிட் ரிலீப் கமிட்டி தலைவர் அகமது இக்பால் தலைமையில், செயல்வீரர்கள் இப்ராஹிம், சதாம், ஷாஜகான் ஆகியோர் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி, தொண்டமாந்துறை கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்களின் கல்லறையில் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்தனர். முஸ்லீம் அமைப்பினரின் இச்செயலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
Next Story






