என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர் மற்றும் மாமியாரை கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியல்
Byமாலை மலர்26 Jan 2022 6:17 AM GMT (Updated: 26 Jan 2022 6:17 AM GMT)
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர் மற்றும் மாமியாரை கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாகல்குழி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ராஜ்குமார் (32), கூலித் தொழிலாளி. திருப்பூரில் வேலை செய்து வரும் இவருக்கும் கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த டிப்ளமோ நர்சிங் படித்துள்ள தேவி (23) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் ராஜ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. மேலும் மது குடித்து விட்டு தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த தேவி சாண பவுடரைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்ய தேவியின் உறவினர்கள் சம்மதிக்காமல், தேவியின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் ராஜ்குமார் மற்றும் மாமியார் ஜெயலட்சுமி ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையிலான பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ரவிசக்கரவர்த்தி, சப்& இன்ஸ் பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சுபா உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது, மேலும் பிரேத பரிசோதனை முடிவு வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது தேவியின் கணவர் ராஜ்குமாரிடம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறியதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருமணமான நான்கு வருடங்களில் பெண் இறந்து போன சம்ப வத்தால் உடையார்பாளை யம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத், தேவியின் உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து தேவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உடலை அடக்கம் செய்ய கீழமாளிகை கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X