என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காலபைரவர் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு
Byமாலை மலர்26 Jan 2022 6:16 AM GMT (Updated: 26 Jan 2022 6:16 AM GMT)
காலபைரவர் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்திவிட்டு செல்கிறார்கள்.
இங்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு ஆண்டு தோறும் தைமாத தேய்பிறை அஷ்டமியில் பெண்கள் முளைப்பாரி பூஜை எடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி உலக நன்மை வேண்டியும், தற்போது உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் தற்பொழுது ஏராளமானோர் மிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாலும் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை முன்வைத்து முளைப்பாரி பூஜையை நடத்தினர்.
முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, முடிவில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியில் கோவிலை சென்றடைந்தனர். பக்தி சிந்தனையுடன் நடைபெற்ற இவ்விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்திவிட்டு செல்கிறார்கள்.
இங்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு ஆண்டு தோறும் தைமாத தேய்பிறை அஷ்டமியில் பெண்கள் முளைப்பாரி பூஜை எடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி உலக நன்மை வேண்டியும், தற்போது உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் தற்பொழுது ஏராளமானோர் மிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாலும் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை முன்வைத்து முளைப்பாரி பூஜையை நடத்தினர்.
முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, முடிவில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியில் கோவிலை சென்றடைந்தனர். பக்தி சிந்தனையுடன் நடைபெற்ற இவ்விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X