search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம்
    X
    தாம்பரம்

    தாம்பரம் மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிப்பு

    தாம்பரம் மாநகராட்சியில் மண்டல அலுவலகங்கள் எந்த பகுதியில் அமைய உள்ளன என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் நகராட்சி மற்றும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

    இதையடுத்து புதிதாக வார்டுகள் வரையறை செய்யப்பட்டு 70 வார்டுகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த நிலையில் தாம்பரம் மாநக ராட்சியை 5 மண்டலங்களாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் இந்த 5 மண்டலங்களில் எந்தெந்த வார்டுகள் இடம் பெற்றுள்ளன என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மண்டலம் 1-ல் வார்டுகள் 1 முதல் 8 வரையும் மற்றும் 10,11,12, 29,30,31 என மொத்தம் 14 வார்டுகள்.

    மண்டலம் 2-ல் வார்டுகள் 9,13 முதல் 21 வரை மற்றும் 24, 26,27,28 என மொத்தம் 14 வார்டுகள்.

    மண்டலம் 3-ல் 22, 23, 25 மற் றும் 34 முதல் 44 வரை மொத்தம் என 14 வார்டுகள்.

    மண்டலம் 4-ல் வார்டு 32, 33 மற்றும் 49 முதல் 61 வரை என மொத்தம் 15 வார்டுகள்.

    மண்டலம் 5-ல் வார்டு 45 முதல் 48 வரையும் மற்றும் 62 முதல் 70 வரையும் என மொத்தம் 13 வார்டுகள் இடம் பெற்றுள்ளன.

    தாம்பரம் மாநகராட்சியில் மண்டல அலுவலகங்கள் எந்த பகுதியில் அமைய உள்ளன என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×