search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராட்டி சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்
    X
    பாராட்டி சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்

    குற்றப்பிரிவு போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

    குற்றப்பிரிவு போலீசாரை திருச்சி சரக டி.ஐ.ஜி. சான்றிதழ் வழங்கினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பாக பணியாற்றிய சிறப்பு குற்றப்பிரிவு காவல் துறையினரை, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் சமீபகாலமாக நடந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்ததோடு மட்டுமல்லாமல், குற்றவாளிகளிடமிருந்து 32 பவுன் தங்கம், 784 கிராம் வெள்ளி, 30,700 ரூபாய் ரொக்கம், 2 மடிக்கணினி, 1 செல் போன், 2 ஒலிபெருக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    குறித்த காலத்தில் சிறப்பாக பணியாற்றிய குற்றப்பிரிவு காவல் துறையினரை, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர், பெரம்பலூர் மாவட்ட சூப்பிரண்ட் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    Next Story
    ×