என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய வாக்காளர் தின விழாவில் தலைமை செயலாளர் அஸ்வினிக்குமார் அடையாள அட்டை வழங்கிய காட்சி.
தேசிய வாக்காளர் தினம் சிறந்த அதிகாரிகளுக்கு விருது
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சிறந்த அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அஸ்வினிகுமார் விருது வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் தேர்தல் துறை சார்பில் தேசிய வாக்காளர் தினம் கம்பன் கலையரங்கில் நடந்தது.
விழாவுக்கு தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் தலைமை வகித்தார். தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் முன்னிலை வகித்தார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார் வரவேற்றார்.
விழாவில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் முதல் முறை வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அட்டையை வழங்கினார். மேலும் பல்வேறு விருதுகளையும் வழங்கினார்.
சிறந்த வாக்காளர் பதிவு அதிகாரிக்கான விருது சத்தியமூர்த்தி, ஆதர்ஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை வாக்காளர் பதிவு அதிகாரி விருது பொய்யாத மூர்த்தி, ராஜ லட்சுமி ஆகியோருக்கும், சிறந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர் விருது லட்சுமி, பிரபாகரன், சுமதி, லலிதா, விவேகானந்தன், கோபிநாதன், சக்திவேல், தேவகி ஆகியோருக்கும், தேர்தலில் தபால் வாக்குகளை நிர்வகித்தல் மற்றும் தேர்தல் நேர கொரோனா தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்ட துணை தேர்தல் அதிகாரி சவுரிரத்னகோஷ் கிஷோர், புதுவை பொறியியல் கல்லூரி துணை பேராசிரியர் கோவிந்தசாமி, வேளாண்துறை துணை இயக்குனர் செழியன் ஆகியோருக்கு வழங்கப் பட்டது.
சிறப்பாக செயலாற்றிய நலவழித்துறை, உள்ளாட்சி, தேசிய தகவல் நிறுவனம், கள விளம்பரத்துறையினருக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டது.
சிறந்த தேர்தல் கல்வி ஒருங்கிணைப்பு அதிகாரி களுக்கான விருது பாரதிதாசன் அரசு கல்லூரி துணை பேராசிரியர் அருள்மேரி, இந்திராகாந்தி கலை அறிவியல் கல்லூரி துணை பேராசிரியர் சதீஷ்குமார், கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரி துணை பேராசிரியர் அருணாதேவி, வாணிதாசன் அரசு பள்ளி கலை ஆசிரியர் உமாபதி, அமலோற்பவம் பள்ளி ஆங்கில விரிவுரையாளர் இன்பராஜ், பேட்ரிக் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சுகுணா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் பரிசுகளை வழங்கினார். முடிவில் துணை தலைமை தேர்தல் அதிகாரி சவுரிரத்னகோஷ்கிஷோர் நன்றி கூறினார்.
Next Story






