search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

    தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மேலமாத்தூர் கீழ தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 64). தொழிலாளியான இவருக்கு அலமேலு என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
    மகன்கள் இரண்டுபேரும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றார். 
    இந்நிலையில் நேற்று மாலை ஆறுமுகம் வீட்டின் அருகில் வயலில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த ஆறுமுகம் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×