search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கூட்டமாக சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்

    நெமிலியில் கூட்டமாக சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    நெமிலி:

    நெமிலி யூனியனுக்கு உட்பட்ட நெடும் புலி கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல் பட்டு வருகின்றது.

    இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் பலர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். வேலை முடித்து விட்டு இரவில் வீடு திரும்பும் போது தெருநாய்கள் கும்பலாக ரோட்டில் அங்கும் இங்கும் ஓடி விபத்து ஏற்படுத்துகின்றது.

    மேலும் கிராம நிர்வாக அலுலகத்துக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.அவர்களை பார்த்து நாய்கள் குரைப்பதால் ஒருவித அச்சத்துடனே வந்து போகின்றனர்.

    மேலும் சில தெரு நாய்களுக்கு உடல் முழுவதும் தோல் நோய் ஏற்பட்டு உள்ளது. இதனால் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.நெடும்புலி பஞ்.நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×