என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உரக்கடையின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது
Byமாலை மலர்24 Jan 2022 9:31 AM GMT (Updated: 24 Jan 2022 9:31 AM GMT)
உரக்கடையின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 54). இவர் அதே ஊரைச் சேர்ந்த விவேக் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் கடையை வாடகைக்கு வைத்து, கடந்த 34 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து கொண்டு நாகராஜன் கடையை பூட்டிவிட்டு, கடையின் பின்புறம் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார். காலை நாகராஜன் கடைக்கு வந்து பார்த்த போது, கடையில் மர பலகையிலான கதவின் ஒருபுறம் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த பணம் திருட்டு போயிருந்தது. மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் சேமிப்பு அலகும் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து நாகராஜன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நாகராஜன் கடையின் அருகே உள்ள சலூன் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர்.
அப்போது அதில், அதே களரம்பட்டியை சேர்ந்த தெய்வசிகாமணி (52) என்பவர் நாகராஜனின் கடை கதவை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடிவிட்டு வெளியே வந்தது பதிவாகியிருந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து தெய்வசிகாமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 700 ரூபாயை கைப்பற்றினர். தெய்வசிகாமணி மீது ஏற்கனவே சில திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X