என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலி 1,130 பேருக்கு புதிதாக தொற்று
புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் 23-ந் தேதி 2 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக ஆயிரத்து 130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 906, காரைக்காலில் 167, ஏனாமில் 40, மாகியில் 17 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 120, காரைக்காலில் 35, ஏனாமில் 12, மாகியில் 18 பேர் என 185 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 977, காரைக்காலில் 135, ஏனாமில் 9, மாகியில் 51 பேர் என ஆயிரத்து 172 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 343 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 783 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும் பியுள்ளனர்.
புதுவையில் 12 ஆயிரத்து 88, காரைக்காலில் 2 ஆயிரத்து 725, ஏனாமில் 523, மாகியில் 131 பேர் என 15 ஆயிரத்து 467 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 15 ஆயிரத்து 652 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த 86 வயது முதியவர், காராமணிக்குப்பத்தை சேர்ந்த 61 ஆண் என 2 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 908 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 22 ஆயிரத்து 3 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story






