search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேகம் நடந்தது.
    X
    கும்பாபிஷேகம் நடந்தது.

    லட்சுமிபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

    திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழி தாலுகா, திருநின்றியூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு 
    உட்பட்ட வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி தேவஸ்தானத்துடன் 
    இணைந்த உலக நாயகி அம்பாள் சமேத லட்சுமி புரீஸ்வரர் சுவாமி 
    கோவில் அமைந்துள்ளது. 

    தேவாரபதிகம் பெற்ற, செங்கோட்சோழன் கட்டிய மாடக்கோவில் 
    ஒன்றாகும். மூலவர் சுயம்பு பிரசித்திப்பெற்ற இக்கோவிலுக்கு 
    கும்பாபிஷேகம் செய்திட முடிவுசெய்யப்பட்டு பணிகள் 
    தொடங்கி நடந்து முடிந்தது.

    இதனையடுத்து கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஏற்பாட்டின்படி கடந்த 20-ந்தேதி யாகசாலை 
    பூஜைகள் தொடங்கப்பட்டது. இதனைமுன்னிட்டு சொக்க நாதர் பெருமானுடன், தருமபுரத்திலிருந்து பாதயாத்திரையாக 
    குருமகா சந்நிதானம் புறப்பட்டு திருநின்றியூர் வந்தடைந்தார். 

    விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப் பெற்று பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 
    யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீரால் அடங்கிய கடங்கள் 
    புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான 
    கலசங்களை அடைந்தன.

    தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் 
    ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் 
    ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 
    சூரியனார் கோவில் ஆதீனம் 28-வது குருமகா சன்னிதானம் மகாலிங்க 
    தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோவில் அர்ச்சகர் 
    சேதுராம குருக்கள் தலைமையில், வைத்தீஸ்வரன் கோவில் ரமேஷ், திருக்கடையூர் மகேஷ் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கோபுர 
    கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவில் சிதம்பரம் மவுனகுரு சாமி, 
    தருமபுரம், திருவாவடுதுறை, சூரியனார் கோவில் திருமடங்களின் 
    தம்பிரான் சுவாமிகள், உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், வழக்குரைஞர் ராம. சேயோன், முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீர பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை திருநாவுக்கரசு சுவாமிகள் தலைமையில் கோவில் சிப்பந்திகள், பக்தர்கள் செய்திருந்தனர். 

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×