என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கேரளா, தமிழகத்தை போல: பாண்டிச்சேரியிலும் கல்வி தொலைக்காட்சி-மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கோரிக்கை

    கேரளா, தமிழகத்தை போல புதுவையிலும் கல்வி தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா காரணமாக குழந்தைகளுக்கு 2 ஆண்டாக கற்றல்  இழப்பு  ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் கூடுதலாக ஊட்டச்சத்து குறை பாட்டுக்கும் ஆளாகி யுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால் எந்த ஊடகம் வழியாக நடத்த வேண்டும். எத்தனை மணி நேரம் நடத்த வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடவில்லை. பல மாணவர்கள் இணையதள வசதி இல்லாதவர்களாக உள்ளனர். 

    இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பு மாணவர் கள் மீது அக்கறையில்லாத புதுவை அரசின் போக்கை உணர்த்துகிறது. இணையதள வசதியற்ற அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. 

    கேரளா, தமிழகத்தில் உள்ளது போல புதுவையில் கல்வி தொலைக்காட்சியை அரசு தொடங்க வேண்டும். பள்ளி மூடல்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பசியால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க அங்கன்வாடி மையங்களில் மதிய உணவு வழங்க வேண்டும். 

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×