search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    X
    சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    245 பேருக்கு தாலிக்கு தங்கம்

    சோளிங்கர் பகுதியில் 245 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றிய அலுவலகத்தில் 245 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட சமூக நல அலுவலர் வசந்திஆனந்தன் தலைமை தாங்கினார். 

    ஒன்றியக்குழு தலைவர் கலைகுமார், துறைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தலங்கை மாரிமுத்து வெங்குப்பட்டு ராமன், சோமசுந்தரம் சுகந்திமுருகேசன், புலிவலம் நதியாமகேஷ் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரகுராம்ராஜு முன்னிலை வகித்தார். 

    சோளிங்கர் சமூக நல விரிவாக்க அலுவலர் சுகந்தி அனைவரையும் வரவேற்றார். 

    இந்த தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் ஏ.எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சோளிங்கர் ஒன்றியத்துக்குட்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மொத்தம் 245 பவுன் மற்றும் நோயாளிகளுக்கு நேரிலும் மற்றும் 87 லட்சம் ரூபாய் மட்டும் அவர் அவரது வங்கிக் கணக்கில் வரவு செய்து வழங்கினார்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் சவுந்தரராஜன், தனசேகர், செங்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், ஒன்றிய அலுவலக மேலாளர் பிரபாகர் மற்றும் பயனாளிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×