என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
Byமாலை மலர்23 Jan 2022 7:12 AM GMT (Updated: 23 Jan 2022 7:12 AM GMT)
சீர்காழியில் இன்று புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பக்தர்களின்றி நடந்தது
சீர்காழி:
சீர்காழியில் பிரசித்தி பெற்ற புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தை 1-ந்தேதி பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் இரவு வீதி உலா நடந்து வந்தது.
விழாவில் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை
நடந்து முடிந்தது.
இதனிடையே பத்தாம் நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேர் புறப்பாடு நடந்தது. முன்னதாக
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார்.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேர் பக்தர்கள் அனுமதி இன்றி டிராக்டர் வாகனம் மூலம் கட்டி இழுக்கப் பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X