என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெறிச்சோடிய முள்ளோடை நுழைவு வாயில்
தமிழகத்தில் ஊரடங்கு: புதுவை எல்லைகள் வெறிச்சோடியது
புதுவை எல்லையில் ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
தமிழகப் பகுதியில் 3-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
புதுவை மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தவில்லை. இதனால் புதுவை மாநிலத்தை ஒட்டிய தமிழக பகுதியான கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் புதுவைக்கும், புதுவையைச் சேர்ந்தவர்கள் பிற மாவட்டத்திற்கும் செல்ல முடியாமல் தடுத்து வருகின்றனர்.
புதுவை எல்லைப்பகுதி யான முள்ளோடையில் வாகன நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் கோரிமேடு, காலாப்பட்டு உள்ள புதுவை எல்லைப்பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கவில்லை.
தமிழக பகுதியில் ஊரடங்கால், புதுவை நகரத்திற்கு மற்றும் கிராமத்திற்கு செல்லும் பஸ்கள் முழுமையாக இயக் கப்படவில்லை. இதனால் ஏராளமான பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்து வராததால் கவலை அடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் தமிழக பகுதியும் உள்ளதால் புதுவையில் இருந்து கிராம பகுதிக்கு செல்லும்போது அங்கு தமிழக போலீசாரால் (ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம்) தடுத்து நிறுத்தப்படுகின்றனர். மேலும் ஊரடங்கை மீறுவதாக கூறி ரூ.500 அபராதம் விதிக்கின்றனர்.
முகூர்த்த தினம் என்பதால் பல இடங்களில் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதற்கு உறவினர்கள், நண்பர்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
புதுவை அரசு வருங் காலங்களில் தமிழகப் பகுதியில் ஊரடங்கு இருந்தால் புதுவை மாநிலத்தில் இருக்கும் தமிழக மக்களை அனுமதிக்க அரசு அனுமதி பெற வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






