என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு ஊழியர்கள் உண்ணாவிரதம்
Byமாலை மலர்22 Jan 2022 6:41 AM GMT (Updated: 22 Jan 2022 6:41 AM GMT)
2 மாத சம்பளம் வழங்க கோரி பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை சாலை போக்கு வரத்துக்கழக அம்பேத்கர் ஊழியர்கள் சங்கத்தினர் 2 மாத சம்பளம், 2 ஆண்டு போனஸ் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். போராட்டத்தை அரசு ஊழியர் ஐக்கிய பேரவை பொதுச்செயலாளர் மணீத் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ஐக்கிய பேரவை அமுதவன், மார்க்சிஸ்டு தமிழ்மாநில குழு பெருமாள், சிறை பாண்டியன், சேது செல்வம், குருநாதன், சக்திசிவம், நாகமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தொழிற்சங்க பொறுப்பாளர்கள் பக்கிரி சாமி, அமிர்தவேல், பூபாலன், கார்த்திமுனுசாமி, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை அரசு ஊழியர் ஐக்கிய பேரவை முதன்மை செயலாளர் பாவாணன் முடித்து வைக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X