என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டம்
    X
    கள்ளக்குறிச்சி மாவட்டம்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் பதவி- மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

    விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி, குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    2015-ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என்ற விகிதத்தில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி, குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும். அல்லது குழந்தை உளவியல் அல்லது சமூகவியல் அல்லது மனிதமேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்  35  வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

    ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

    தகுதி வாய்ந்த நபர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்-156, சாரதாம்பாள் வீதி, நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401, என்ற முகவரியில் விண்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் 04146 - 290659 என்ற தொலைபேசி எண்ணிலும், dcpuvpm1@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
     
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×