என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ரெயில் மோதி தொழிலாளி சாவு
அரக்கோணம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:
திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் வேலு (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம்
ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷணன் வேலுவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






