என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொழிற்பாதுகாப்பு படையில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில வாலிபர்
Byமாலை மலர்21 Jan 2022 9:23 AM GMT (Updated: 21 Jan 2022 9:23 AM GMT)
அரக்கோணம் தொழிற்பாதுகாப்பு படையில் ஆள்மாறாட்டம் செய்து பணியில் சேர்ந்த வடமாநில வாலிபர் சிக்கினார்.
அரக்கோணம்:
அரக்கோணம் நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வாகுபவர்களுக்கு இம் மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வானவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 25&ந்தேதி பயிற்சிக்கு வந்தனர். சமையலர் பணி பயிற்சிக்கு வந்த உத்தர பிரதேச மாநிலம், அலே தாத்பூர் பகுதியை சேர்ந்த சுமித் குமார் (வயது 24). என்பவரின் கைரேகையை உயரதிகாரிகள் பதிவிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்வான போது அங்கு பதியப்பட்ட கைரேகையுடன் அரக்கோணம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பதியப்பட்ட கைரேகையினை சரிபார்த்த போது அவரது கைரேகை சரியாக பொருந்தவில்லை. இதனால் அவர் ஆள்மாறாட்டம் செய்து பயிற்சிக்கு வந்திருக்கலாம் என அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து மத்திய தொழிற்பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அகிலேஷ் தக்கோலம் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சுமித்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X