search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு முதியவர் பலி 2,500 பேருக்கு புதிதாக தொற்று

    புதுவையில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். மேலும் புதிதாக 2,500 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் 20-ந் தேதி 6 ஆயிரத்து 93 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 2 ஆயிரத்து 528 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் ஆயிரத்து 985, காரைக்காலில் 411, ஏனாமில் 105,    மாகியில் 27 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 77, காரைக் காலில் 38, ஏனாமில் 11, மாகியில்13 பேர்   என 139 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் ஆயிரத்து 301, காரைக்காலில் 120, ஏனாமில் 15,   மாகியில்22  பேர் என ஆயிரத்து 458 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை   ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 870 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 850 பேர் சிகிச்சையில்   குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 11 ஆயிரத்து 432, காரைக்காலில் 2 ஆயிரத்து 81, ஏனாமில் 316, மாகியில் 154 பேர் என 13   ஆயிரத்து 983 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 14 ஆயிரத்து 122 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர்.  
    புதுவை பாக்கு முடையான்பட்டை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில்   கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவையில்  2&வது  தவணை உட்பட 15 லட்சத்து 15 ஆயிரத்து   818 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×