என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
சாலை விபத்தில் 2 பேர் பலி ஒருவர் காயம்
சாலைவிபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
திருச்சி பீமன்நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 23). இவரது நண்பர் சூரியா. இவர்கள் இருவரும் குளித்தலையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
முசிறி&திருச்சி சாலையில் வெல்லூர் சத்திரம் அருகே வந்த போது, எதிரே வந்த லாரி மீது மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட சுரேந்தர், படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சூரியா படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த முசிறி போலீசார் சூரியாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இறந்த சுரேந்தர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சின்னவெண்மணி காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(28). இவர் இருசக்கர வாகனத்தில் நல்லறிக்கையிலிருந்து புதுவேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த கரும்பு ஏற்றிவந்த டிராக்டர் மீது பின்னால் மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






