என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுப்பிரமணியர் கோவிலில் பால்குட திருவிழா
Byமாலை மலர்19 Jan 2022 10:22 AM GMT (Updated: 19 Jan 2022 10:22 AM GMT)
செந்துறை பகுதிகளில் தைப்பூசத்தையொட்டி முருகன் கோயில்களில் பால் காவடி எடுத்தல், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில், மூன்றாவது ஆண்டாக பால்குட திருவிழா நடைபெற்றது.
பால்குடம் திருவிழாவை முன்னிட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி சுப்ரமணியர் செல்லியம்மன் கோவில் அருகிலுள்ள ஏரியிலிருந்து பால்குடம், காவடி எடுத்தனர்.
அவர்கள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க நடனமாடியபடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பல்வேறு மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் செந்துறை பகுதியிலுள்ள உஞ்சினி, நல்லாம்பாளையம், செந்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருகன் கோவில்களில் சுவாமிகளுக்கு பால், தயிர், தேன் உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில், மூன்றாவது ஆண்டாக பால்குட திருவிழா நடைபெற்றது.
பால்குடம் திருவிழாவை முன்னிட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி சுப்ரமணியர் செல்லியம்மன் கோவில் அருகிலுள்ள ஏரியிலிருந்து பால்குடம், காவடி எடுத்தனர்.
அவர்கள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க நடனமாடியபடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியருக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பல்வேறு மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் செந்துறை பகுதியிலுள்ள உஞ்சினி, நல்லாம்பாளையம், செந்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருகன் கோவில்களில் சுவாமிகளுக்கு பால், தயிர், தேன் உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X