search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    3-வது நாளாக கொரோனாவுக்கு 3 பேர் பலி

    புதுவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் 6 ஆயிரத்து 116 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  இதில் புதிதாக ஆயிரத்து 849 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் ஆயிரத்து 316, காரைக்காலில் 447, ஏனாமில்  58,  மாகியில் 28 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  புதுவையில் 79, காரைக் காலில் 31, ஏனாமில் 6, மாகியில் 11 பேர் என 127 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 793, காரைக்காலில் 77, ஏனாமில் 1, மாகியில்24  பேர் என 895 பேர் சிகிச்சையில் குண மடைந்து வீடு திரும்பினர்.  புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 559 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 319 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    புதுவையில் 9 ஆயிரத்து 538, காரைக்காலில் ஆயிரத்து 360, ஏனாமில் 165, மாகியில் 154 பேர் என 11 ஆயிரத்து 217 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 11 ஆயிரத்து 344 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். 

    புதுவையில் 3-வது நாளாக 3 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது.  புதுவையில்  2-வது  தவணை உள்பட 15 லட்சத்து 8 ஆயிரத்து 290 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
     
    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×