என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருபுவனையில் கொலை குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம்
Byமாலை மலர்19 Jan 2022 5:56 AM GMT (Updated: 19 Jan 2022 5:56 AM GMT)
திருபுவனையில் தொழிலாளியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் செய்தனர்.
திருபுவனை:
திருபுவனை காலனி வி.டி.சி. தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது38). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி என்ற மனைவியும் மற்றும் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 31&ந் தேதி இரவு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் (23), வினோத்(25), யோகேஸ்வரன்(19) ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரவீந்திரனை அவர்கள் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த ரவீந்திரனை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவீந்திரன் இறந்து போனார்.
இதையடுத்து ரவீந்திரனின் உறவினர்கள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருபுவனை போலீசில் புகார் அளித்தனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்தனர்.
இதையடுத்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு, அஜய்குமார் ஆகியோர் சமாதானம் செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து கவுரிசங்கர், வினோத், யோகேஸ்வரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் குற்றவாளி களை கைது செய்யக்கோரி ரவீந்திரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புதுவை-விழுப்புரம் சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுவை வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்நாதன், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரவேலு, அஜய்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ரவீந்திரன் சாவுக்கு காரணமான 3 பேரையும் இன்று மாலைக்குள் கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனையேற்று ரவீந்திரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக புதுவை&விழுப்புரம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X