என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னையை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் மீது புகார்
அரக்கோணம்:
சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் காவ்யா (வயது 29). முதல் கணவரை பிரிந்து ஒரு மகள், ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் அடுத்த சித்தூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
காவ்யா, பாலச்சந்தர் இருவருக்கும் குடும்பதகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது பாலச்சந்தர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் காவ்யாவை தாக்கினார்.
இதுகுறித்து காவ்யா தக்கோலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பாலச்சந்தர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து பாலச்சந்தர் ஜாமினில் வெளியே வந்தார். மீண்டும் அவர் காவ்யா வீட்டிற்கு வர தொடங்கினார். இதனால் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக காவ்யா தனது 8 வயது மகள் மற்றும் மகனுடன் சென்னையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
சென்னையில் வைத்து அவரது மகளை குளிக்க வைத்தார். அப்போது சிறுமியின் உடலில் சில மாற்றங்கள் தெரிந்தது. இதுகுறித்து கேட்டதற்கு பாலச்சந்தர் பாலியல் கொடுத்து தவறாக நடக்க முயன்றதாக சிறுமி தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த காவ்யா நேற்று சிறுமியை அழைத்துக் கொண்டு அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார்.
அதில் சிறுமியிடம் அத்துமீறி நடந்த பாலச்சந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்