என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருக்கனூர் பகுதியில் தைப்பூச விழா கொண்டாட்டம்
Byமாலை மலர்18 Jan 2022 9:38 AM GMT (Updated: 18 Jan 2022 9:38 AM GMT)
திருக்கனூர் பகுதியில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு வள்ளி தெய்வானை சமேத திருமுருகர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அங்கு உள்ள சங்கராபரணி ஆற்றில் கரகம் ஜோடித்து பொதுமக்கள் ஊர்வலமாக சென்று முருகர் கோவிலை அடைந்தனர்.
அங்கு முருகனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம், அக்னி சட்டி எடுத்தல், ஆகாய விமானம் இழுத்தல் ஆகியவற்றை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து பக்தர்கள் காவடிகளை எடுத்துக் கொண்டு வீதி உலா சென்றனர். சாமி வீதி உலா காட்சியும் நடைபெற்றது.
இதேபோன்று கூனிச்சம் பட்டில் உள்ள சுப்பிரமணியர் கோவிலிலும் தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று அலகு குத்துதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. திருக்கனூரில் உள்ள பாலமுருகன் கோவிலில் முருகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு காவடி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங் களிலும் தைப்பூச விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X