என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கிருமாம்பாக்கம் அருகே காயங்களுடன் கிடந்த மயில் மீட்பு பெண்ணுக்கு பாராட்டு
Byமாலை மலர்18 Jan 2022 9:27 AM GMT (Updated: 18 Jan 2022 9:27 AM GMT)
கிருமாம்பாக்கம் அருகே காயங்களுடன் கிடந்த மயிலை மீட்ட பெண்ணை பொதுமக்கள் பாராட்டினர்.
புதுச்சேரி:-
கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் நாடார் வீதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 46). கூலித் தொழிலாளி.
இவர் தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ஒரு வாய்க்காலில், பெண்மயில் ஒன்று அடிபட்டு காயங்களுடன் கிடந்தது. இதனை பார்த்த சித்ரா மயிலை மீட்டு தனது வீட்டிற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து, உணவு வழங்கி மயிலின் உயிரை காப்பாற்றினார். பின்னர் இது குறித்து போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உதவி சப்--இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மயிலை பார்வையிட்டு, இது குறித்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே, அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் சக்திவேல், வேலாயுதம் ஆகியோரிடம் சித்ரா மயிலை ஒப்படைத்தார். வனத்துறை ஊழியர்கள் மயிலுக்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர். காயங்களுடன் கிடந்த மயிலை காப்பாற்றிய சித்ராவை, போலீசாரும், வனத்துறை ஊழியர்களும் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X