என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் நாளை மறுநாள் தொடக்கம்
Byமாலை மலர்18 Jan 2022 2:48 AM GMT (Updated: 18 Jan 2022 2:48 AM GMT)
பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் நாளை மறுநாள் தொடங்கப்படும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
பாரதிதாசன் மகளிர் கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் 2021-22 கல்வியாண்டில் முதலாமாண்டு வகுப்புகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்க உள்ளன. காலைநேர சுழற்சியில் (காலை 8.30 முதல் 12.40 வரை) அனைத்து அறிவியல் துறைகள், வணிகவியல் மற்றும் வணிகத்துறை செயலர் இயல் பிரிவுகளுக்கும், மதியநேர சுழற்சியில் (மதியம் 1 முதல் 5.10 மணி வரை) அனைத்து கலை இயல் துறைகளுக்கும் வகுப்புகள் நடைபெறும்.
அனைத்து மாணவிகளும் கல்லூரிக்கு வரும் முதல் நாள் அன்றே 11-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, தடுப்பூசி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை அந்தந்த துறை தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்கவேண்டும். கொரோனா கட்டுப்பாடு முறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாரதிதாசன் மகளிர் கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் 2021-22 கல்வியாண்டில் முதலாமாண்டு வகுப்புகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்க உள்ளன. காலைநேர சுழற்சியில் (காலை 8.30 முதல் 12.40 வரை) அனைத்து அறிவியல் துறைகள், வணிகவியல் மற்றும் வணிகத்துறை செயலர் இயல் பிரிவுகளுக்கும், மதியநேர சுழற்சியில் (மதியம் 1 முதல் 5.10 மணி வரை) அனைத்து கலை இயல் துறைகளுக்கும் வகுப்புகள் நடைபெறும்.
அனைத்து மாணவிகளும் கல்லூரிக்கு வரும் முதல் நாள் அன்றே 11-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, தடுப்பூசி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை அந்தந்த துறை தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்கவேண்டும். கொரோனா கட்டுப்பாடு முறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X